avasiyam un vEndi Thiruppugazh அவசியம் உன்வேண்டி திருப்புகழ்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
அவசியம் உன்வேண்டி (திருமுருகன்பூண்டி)
முருகா! உனது சரணத்தைப் பற்றி இருக்க அருள்.


 

தனதனனந் தாந்தத் ...... தனதான

 

அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும்

அறிவினுணர்ந் தாண்டுக் ...... கொருநாளில்

தவசெபமுந் தீண்டிக் ...... கனிவாகிச்

சரணமதும் பூண்டற் ...... கருள்வாயே


சவதமொடுந் தாண்டித் ...... தகரூர்வாய்

சடுசமயங் காண்டற் ...... கரியானே

சிவகுமரன் பீண்டிற் ...... பெயரானே

திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல் 

 

அவசியம் உன் வேண்டிப் ...... பலகாலும்,

அறிவின் உணர்ந்து ஆண்டுக்கு ......ஒருநாளில்,

தவ செபமும் தீண்டிக் ...... கனிவு ஆகி,

சரணம் அதும் பூண்டற்கு ...... அருள்வாயே.

 

சவதமொடும் தாண்டித் ...... தகர் ஊர்வாய்!

சடுசமயம் காண்டற்கு ...... அரியானே!

சிவகுமர! அன்பு ஈண்டில் ...... பெயரானே!

திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.

Comments

Popular posts from this blog

Murugavel panniru Thirumurai

Lord Muruga 1000 names

Chinmaya Mission Tiruvallur

Bhagavad Gita Summary Classes