Posts

Showing posts from October, 2024

avasiyam un vEndi Thiruppugazh அவசியம் உன்வேண்டி திருப்புகழ்

Image
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அவசியம் உன்வேண்டி (திருமுருகன்பூண்டி) முருகா! உனது சரணத்தைப் பற்றி இருக்க அருள்.   தனதனனந் தாந்தத் ...... தனதான   அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும் அறிவினுணர்ந் தாண்டுக் ...... கொருநாளில் தவசெபமுந் தீண்டிக் ...... கனிவாகிச் சரணமதும் பூண்டற் ...... கருள்வாயே சவதமொடுந் தாண்டித் ...... தகரூர்வாய் சடுசமயங் காண்டற் ...... கரியானே சிவகுமரன் பீண்டிற் ...... பெயரானே திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.   பதம் பிரித்தல்     அவசியம் உன் வேண்டிப் ...... பலகாலும் , அறிவின் உணர்ந்து ஆண்டுக்கு ......ஒருநாளில் , தவ செபமும் தீண்டிக் ...... கனிவு ஆகி , சரணம் அதும் பூண்டற்கு ...... அருள்வாயே.   சவதமொடும் தாண்டித் ...... தகர் ஊர்வாய்! சடுசமயம் காண்டற்கு ...... அரியானே! சிவகுமர! அன்பு ஈண்டில் ...... பெயரானே! திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.

paalo thaeno Thiruppugazh பாலோ தேனோ பாகோ (திருவாரூர்) திருப்புகழ்

Image
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாலோ தேனோ பாகோ (திருவாரூர்) முருகா! தாய் (தந்தை) மனம் மகிழ வாழ்ந்து ஈடேற அருள்வாய். தானா தானா தானா தானா      தானா தானத் ...... தனதான பாலோ தேனோ பாகோ வானோர்      பாரா வாரத் ...... தமுதேயோ பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ      பானோ வான்முத் ...... தெனநீளத் தாலோ தாலே லோபா டாதே      தாய்மார் நேசத் ...... துனுசாரந் தாரா தேபே ரீயா தேபே      சாதே யேசத் ...... தகுமோதான் ஆலோல் கேளா மேலோர் நாண்மா      லானா தேனற் ...... புனமேபோய் ஆயாள் தாள்மேல் வீழா வாழா      ஆளா வேளைப் ...... புகுவோனே சேலோ டேசே ராரால் சாலார்      சீரா ரூரிற் ...... பெருவாழ்வே சேயே வேளே பூவே கோவே      தேவே தேவப் ...... பெருமாளே. பதம் பிரித்தல் பாலோ ?  தேனோ ?  பாகோ ?  வானோர்      பாராவாரத்து ...... அமுதேயோ ? பாரோர் சீரோ ?  வேளேர் வாழ்வோ ?      பானோ ?  வான்முத்து ...... என , நீளத் தாலோ தாலேலோ பாடாதே ,      தாய்மார் நேசத்து ...... உனு சாரம் தாராதே ,  பேர் ஈயாதே ,  பே-      சாதே ,   ஏசத் ...... தகுமோதான் ? ஆலஓல் கேளா ,  மேல்ஓர் நாள் ,   மால்      ஆனாது ,  ஏனல் ...... புனமேபோய