Posts

avasiyam un vEndi Thiruppugazh அவசியம் உன்வேண்டி திருப்புகழ்

Image
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அவசியம் உன்வேண்டி (திருமுருகன்பூண்டி) முருகா! உனது சரணத்தைப் பற்றி இருக்க அருள்.   தனதனனந் தாந்தத் ...... தனதான   அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும் அறிவினுணர்ந் தாண்டுக் ...... கொருநாளில் தவசெபமுந் தீண்டிக் ...... கனிவாகிச் சரணமதும் பூண்டற் ...... கருள்வாயே சவதமொடுந் தாண்டித் ...... தகரூர்வாய் சடுசமயங் காண்டற் ...... கரியானே சிவகுமரன் பீண்டிற் ...... பெயரானே திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.   பதம் பிரித்தல்     அவசியம் உன் வேண்டிப் ...... பலகாலும் , அறிவின் உணர்ந்து ஆண்டுக்கு ......ஒருநாளில் , தவ செபமும் தீண்டிக் ...... கனிவு ஆகி , சரணம் அதும் பூண்டற்கு ...... அருள்வாயே.   சவதமொடும் தாண்டித் ...... தகர் ஊர்வாய்! சடுசமயம் காண்டற்கு ...... அரியானே! சிவகுமர! அன்பு ஈண்டில் ...... பெயரானே! திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.

paalo thaeno Thiruppugazh பாலோ தேனோ பாகோ (திருவாரூர்) திருப்புகழ்

Image
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாலோ தேனோ பாகோ (திருவாரூர்) முருகா! தாய் (தந்தை) மனம் மகிழ வாழ்ந்து ஈடேற அருள்வாய். தானா தானா தானா தானா      தானா தானத் ...... தனதான பாலோ தேனோ பாகோ வானோர்      பாரா வாரத் ...... தமுதேயோ பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ      பானோ வான்முத் ...... தெனநீளத் தாலோ தாலே லோபா டாதே      தாய்மார் நேசத் ...... துனுசாரந் தாரா தேபே ரீயா தேபே      சாதே யேசத் ...... தகுமோதான் ஆலோல் கேளா மேலோர் நாண்மா      லானா தேனற் ...... புனமேபோய் ஆயாள் தாள்மேல் வீழா வாழா      ஆளா வேளைப் ...... புகுவோனே சேலோ டேசே ராரால் சாலார்      சீரா ரூரிற் ...... பெருவாழ்வே சேயே வேளே பூவே கோவே      தேவே தேவப் ...... பெருமாளே. பதம் பிரித்தல் பாலோ ?  தேனோ ?  பாகோ ?  வானோர்      பாராவாரத்து ...... அமுதேயோ ? பாரோர் சீரோ ?  வேளேர் வாழ்வோ ?      பானோ ?  வான்முத்து ...... என , நீளத் தாலோ தாலேலோ பாடாதே ,      தாய்மார் நேசத்து ...... உனு சாரம் தாராதே ,  பேர் ஈயாதே ,  பே-      சாதே ,   ஏசத் ...... தகுமோதான் ? ஆலஓல் கேளா ,  மேல்ஓர் நாள் ,   மால்      ஆனாது ,  ஏனல் ...... புனமேபோய

Thiruppugazh giRimozhi கிறி மொழி

Image
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கிறிமொழிக் கிருதரை (திருத்தணிகை) திருத்தணிகை வேலா!திருவடியில் அணுக அருள். தனதனத் தனதனத் தனதனத்  தனதனத் தனதனத் தனதனத் ...... தனதான ......... பாடல் ......... கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக் கெடுபிறப் பறவிழிக் ...... கிறபார்வைக் கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க் கிகள்தமைச் செறிதலுற் ...... றறிவேதும் அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற் றறவுநெக் கழிகருக் ...... கடலூடே அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற் றடியிணைக் கணுகிடப் ...... பெறுவேனோ பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப் பொறியிலச் சமணரத் ...... தனைபேரும் பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப் புகலியிற் கவுணியப் ...... புலவோனே தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித் தவர்திருப் புதல்வநற் ...... சுனைமேவுந் தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத் தணியினிற் சரவணப் ...... பெருமாளே. பதம் பிரித்தல் கிறிமொழிக் கிருதரை ,  பொறிவழிச் செறிஞரை ,      கெடுபிறப்பு அற விழிக் ...... கிற பார்வைக் கெடு மடக் குருடரை ,  திருடரை ,  சமய தர்க்      கிகள்   தமை ,  செறிதல

Thiruppugazh venkaalam baanam

Image
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் வெங்காளம் பாணம் (திருச்செந்தூர்) மாதர் மயலாகிய துன்பம் தீர வந்து ஆட்கொள்ள வேண்டல் தந்தா தந்தா தந்தா தந்தா தந்தா தந்தத் ...... தனதான வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால் மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை மென்கே சந்தா னென்றே கொண்டார் மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய் வன்பே துன்பப் ...... படலாமோ மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய் கொங்கார் பைந்தே னுண்டே வண்டார் குன்றாள் கொங்கைக் ...... கினியோனே குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ ரும்போய் மங்கப் ...... பொருகோபா கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார் கன்றே வும்பர்க் ...... கொருநாதா கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்திற் ...... பெருமாளே. பதம் பிரித்தல் வெங்காளம் பாணம் சேல் கண், பால் மென்பாகு அம்சொல், ...... குயில்மாலை மென்கேசம் தான், என்றே கொண்டார், மென் தோள் ஒன்றப் ...... பொருள்தேடி, வங்காளம் சோனம் சீனம் போய் வன்பே துன்பப் ...... படல் ஆமோ? மைந்து ஆரும் தோள் மைந்தா! அந்தா! வந்தே இந்தப் ...... பொழுது ஆள்வாய்

Thiruppugazh aththan annai

Image
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அத்தன் அன்னை (சிதம்பரம்) சிதம்பர முருகா! பிறவித் துன்பம் நீங்க அருள். தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய      தத்த தன்ன தய்ய ...... தனதான அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி      அத்தை நண்ணு செல்வ ...... ருடனாகி அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல      லற்று நின்னை வல்ல ...... படிபாடி முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி      முத்த னென்ன வுள்ள ...... முணராதே முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு      முட்ட னிங்ங னைவ ...... தொழியாதோ தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு      தித்து மன்னு பிள்ளை ...... முருகோனே சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய      சித்ர வண்ண வல்லி ...... யலர்சூடும் பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி      பத்தர் கன்னி புல்லு ...... மணிமார்பா பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள      பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே. பதம் பிரித்தல் அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி      அத்தை நண்ணு செல்வர் ...... உடன்ஆகி , அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல்      அற்று ,  நின்னை வல்ல ...... படிபாடி , முத்தன் என்ன ,  வல்லை அத்தன் என்ன

Thiruppugazh pagalavan okkum பகலவன் ஒக்கும்

Image
பகலவ னொக்குங் கனவிய ரத்னம்  பவளவெண் முத்தந் ...... திரமாகப் பயிலமு லைக்குன் றுடையவர் சுற்றம் பரிவென வைக்கும் ...... பணவாசை அகமகிழ் துட்டன் பகிடிம ருட்கொண் டழியும வத்தன் ...... குணவீனன் அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண் டலைதலொ ழித்தென் ...... றருள்வாயே சகலரு மெச்சும் பரிமள பத்மந் தருணப தத்திண் ...... சுரலோகத் தலைவர்ம கட்குங் குறவர்ம கட்குந் தழுவஅ ணைக்குந் ...... திருமார்பா செகதல மெச்சும் புகழ்வய லிக்குந் திகுதிகெ னெப்பொங் ...... கியவோசை திமிலைத விற்றுந் துமிகள்மு ழக்குஞ் சிரகிரி யிற்கும் ...... பெருமாளே. பதம் பிரித்தல் பகலவன் ஒக்கும் கனவிய ரத்னம்      பவள வெண் முத்தம் ...... திரமாகப் பயில முலைக் குன்று உடையவர் சுற்றம்      பரிவு என வைக்கும் ...... பண ஆசை அக மகிழ் துட்டன் ,  பகிடி ,  மருள் கொண்டு      அழியும் அவத்தன் ,  ...... குண ஈனன் , அறிவுஇலி ,  சற்றும் பொறை இலி ,  பெற்று உண்டு      அலைதல் ஒழித்து என்று ...... அருள்வாயே. சகலரும் மெச்சும் பரிமள பத்மம்      தருண பதத் திண் ...... சுர லோகத் தலைவர் மகட்கும் குறவர் மகட்கும் ,      தழுவ அணைக்கும் ...... தி

Thiruppugazh surudhiyAy சுருதியாய்

Image
தனன தானன தானன தானன  தனன தானன தானன தானன தனன தானன தானன தானன ...... தனதான ......... பாடல் ......... சுருதி யாயிய லாயியல் நீடிய தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள் தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு ...... துணையாய்மேல் துறவு மாயற மாய்நெறி யாய்மிகு விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள் சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு ...... சுடர்வீசும் பருதி யாய்மதி யாய்நிறை தாரகை பலவு மாய்வெளி யாயொளி யாயெழு பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு ...... பரமாகும் பரம மாயையி னேர்மையை யாவரு மறியொ ணாததை நீகுரு வாயிது பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு ...... பயனோதான் கருது மாறிரு தோள்மயில் வேலிவை கருதொ ணாவகை யோரர சாய்வரு கவுணி யோர்குல வேதிய னாயுமை ...... கனபாரக் களப பூண்முலை யூறிய பாலுணு மதலை யாய்மிகு பாடலின் மீறிய கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள் ...... கழுவேறக் குருதி யாறெழ வீதியெ லாமலர் நிறைவ தாய்விட நீறிட வேசெய்து கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை ...... குலையாவான் குடிபு கீரென மாமது ராபுரி யியலை யாரண வூரென நேர்செய்து

25 Lessons from Bhagavad Gita

Image
The Bhagavad Gita has always been an inspiration for seekers from various backgrounds, promising both material prosperity and spiritual enlightenment. This initiative aims to distill key aspects of the Gita, interpret them, and make them applicable to our daily lives.  These talks are delivered by Smt. Priya Arunachalam, a student of the 15th Batch Vedanta Course (2011-2013) at Sandeepany Sadhanalaya. Inspired by Swami Tejomayananda and guided by Swami Advayananda, Smt. Priya Arunachalam left her corporate software profession in the USA to dedicate herself to the study and teaching of Vedanta. Currently, she serves as the Director of Chinmaya Rural Development (CORD), leading efforts to support 72 villages across the Tiruvallur District.  Her teachings provide beginners with inspiration and clarity, while advanced seekers appreciate the systematic and organized presentation of spiritual insights, energizing them to remain steadfast on their spiritual journey.

Bhagavad Gita Summary Classes

Image
Shrimad Bhagavad Gita - A Synopsis of 18 chapters 4G - Go through Gita, Grow through Gita Other online classes Thirukkural Posts Thirukkural class Thiruppugazh class Sloka class with meaning Vishnu-sahasra nAmam class Bhagavad Gita Class Upanishads class Bhagavad Gita Summary Classes Bhagavad Gita Chanting

Manah Shodhanam

Image
The problem of mind control is as old as the hills. The mind never tires of playing tricks and there is no way to peace unless it is tamed. Indeed he is strong who conquers others, but he is mighty who conquers himself. Manah Sodhanam is an original Sanskrit composition of Swami Tejomayananda. This text and commentary helps us understand the working of our mind and gives practical solutions of how to tackle it. With a pure mind, life becomes cheerful and meaningful and finally peaceful and blissful. manah shodhanam script Manah Shodanam presentation Sw Shivanandaji Spiritual Instructions for Sadhakas 1 Sw Shivanandaji Spiritual Instructions for Sadhakas 2