alagu il avuNarai Thiruppugazh அலகு இல் அவுணரை திருப்புகழ்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
அலகுஇல் அவுணரை (மதுரை)

முருகா! உம்மையே நினைந்து உருகும் அன்பை 
அடியேனுக்குத் தந்து அருள் புரிவீர்.

 

 

தனதன தனனத் தந்த தானன

     தனதன தனனத் தந்த தானன

     தனதன தனனத் தந்த தானன ...... தந்ததான

 

 

அலகில வுணரைக் கொன்ற தோளென

     மலைதொளை யுருவச் சென்ற வேலென

     அழகிய கனகத் தண்டை சூழ்வன ...... புண்டரீக

 

அடியென முடியிற் கொண்ட கூதள

     மெனவன சரியைக் கொண்ட மார்பென

     அறுமுக மெனநெக் கென்பெ லாமுரு ...... கன்புறாதோ

 

கலகல கலெனக் கண்ட பேரொடு

     சிலுகிடு சமயப் பங்க வாதிகள்

     கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங்

 

கலைகளு மொழியப் பஞ்ச பூதமு

    மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன

     கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென்

 

இலகுக டலைகற் கண்டு தேனொடு

     மிரதமு றுதினைப் பிண்டி பாகுடன்

     இனிமையி னுகருற் றெம்பி ரானொரு .......கொம்பினாலே

 

எழுதென மொழியப் பண்டு பாரதம்

     வடகன சிகரச் செம்பொன் மேருவில்

     எழுதிய பவளக் குன்று தாதையை ...... யன்றுசூழ

 

வலம்வரு மளவிற் சண்ட மாருத

     விசையினும் விசையுற் றெண்டி சாமுக

     மகிதல மடையக் கண்டு மாசுண ...... முண்டுலாவு

 

மரகத கலபச் செம்புள் வாகன

     மிசைவரு முருகச் சிம்பு ளேயென

     மதுரையில் வழிபட் டும்ப ரார்தொழு ...... தம்பிரானே.

 

 

பதம் பிரித்தல்

 

 

அலகுஇல் அவுணரைக் கொன்ற தோள் என,

     மலைதொளை உருவச் சென்ற வேல் என,

     அழகிய கனகத் தண்டை சூழ்வன,...... புண்டரீக

 

அடி என,முடியில் கொண்ட கூதளம்

     எனவன சரியைக் கொண்ட மார்பு என,

     அறுமுகம் எனநெக்கு என்பு எலாம் உருகு......அன்பு உறாதோ?

 

கலகல கல என,கண்ட பேரொடு

     சிலுகு இடு சமயப் பங்க வாதிகள்

     கதறிய,வெகுசொல் பங்கம் ஆகிய ...... பொங்கு அளாவும்,

 

கலைகளும் ஒழிய,பஞ்ச பூதமும்

     ஒழி உற,மொழியில் துஞ்சு உறாதன

     கரணமும் ஒழியத் தந்த ஞானம் ......இருந்தவாறு என்?

 

இலகு கடலை கல்கண்டு,தேனொடும்,

     இரதம் உறு தினைப் பிண்டி,பாகுடன்,

     இனிமையின் நுகருற்றம் பிரான்ரு .......கொம்பினாலே

 

எழுது என மொழிய,பண்டு பாரதம்

     வடகன சிகரச் செம்பொன் மேருவில்

     எழுதிய பவளக் குன்று,தாதையை ...... அன்றுசூழ

 

வலம்வரும் அளவில்,சண்ட மாருத

     விசையினும் விசை உற்றுண் திசாமுக

     மகிதலம் அடையக் கண்டு,மாசுணம் ......உண்டு உலாவு

 

மரகத கலபச் செம்புள் வாகனம்

     மிசைவரு முருக! சிம்புளே! என

     மதுரையில் வழிபட்டு உம்பரார் தொழு...... தம்பிரானே.

Comments

Post a Comment

Popular posts from this blog

Murugavel panniru Thirumurai

Lord Muruga 1000 names

Chinmaya Mission Tiruvallur

Bhagavad Gita Summary Classes