Thiruppugazh venkaalam baanam

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
வெங்காளம் பாணம் (திருச்செந்தூர்)

மாதர் மயலாகிய துன்பம் தீர வந்து ஆட்கொள்ள வேண்டல்


தந்தா தந்தா தந்தா தந்தா
தந்தா தந்தத் ...... தனதான

வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்
மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை

மென்கே சந்தா னென்றே கொண்டார்
மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி

வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
வன்பே துன்பப் ...... படலாமோ

மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய்

கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
குன்றாள் கொங்கைக் ...... கினியோனே

குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
ரும்போய் மங்கப் ...... பொருகோபா

கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
கன்றே வும்பர்க் ...... கொருநாதா

கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தா செந்திற் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

வெங்காளம் பாணம் சேல் கண், பால்
மென்பாகு அம்சொல், ...... குயில்மாலை

மென்கேசம் தான், என்றே கொண்டார்,
மென் தோள் ஒன்றப் ...... பொருள்தேடி,

வங்காளம் சோனம் சீனம் போய்
வன்பே துன்பப் ...... படல் ஆமோ?

மைந்து ஆரும் தோள் மைந்தா! அந்தா!
வந்தே இந்தப் ...... பொழுது ஆள்வாய்.

கொங்கு ஆர் பைந்தேன் உண்டே, வண்டுஆர்
குன்றாள் கொங்கைக்கு ...... இனியோனே!

குன்றோடும் சூழ் அம்பு ஏழும்
சூரும் போய் மங்கப் ...... பொரு கோபா!

கங்காளம் சேர் மொய்ம்பார் அன்புஆர்
கன்றே! உம்பர்க்கு ...... ஒரு நாதா!

கம்பு ஊர் சிந்து ஆர் தென்பால் வந்தாய்!
கந்தா! செந்தில் ...... பெருமாளே.

Comments

Popular posts from this blog

Lord Muruga 1000 names

Murugavel panniru Thirumurai

paalo thaeno Thiruppugazh பாலோ தேனோ பாகோ (திருவாரூர்) திருப்புகழ்

alagu il avuNarai Thiruppugazh அலகு இல் அவுணரை திருப்புகழ்